Thursday, November 10, 2011
தலைமுடி ...!
உயரத்தில் இவன் குடியிருப்பு ,
உதிர்ந்தபின் இல்லை மதிப்பு ,
தலையில் இருக்கும் வரை
அப்படி ஒரு கவனிப்பு ,
தவறி உணவில் விழுந்தால்
அப்பப்பா ! என்ன ஒரு சலிப்பு ...!!
இவனுக்கு இல்லை மறுபிறப்பு ..!
இன்றுவரை யாரும் முடிக்கவில்லை
இவர்களின் கணக்கெடுப்பு ..!!
உள்ளவரை தலைக்கு
அழகான கரும்பொன் காப்பு ...!!!
உலர்ந்து உதிர்ந்தபின் மனிதன்
உள்ளாகிறான் பரிகாசிப்புக்கு ..!!!!
பெண்ணின் அழகுக்கு வேண்டும்
இவன் அருள்பாலிப்பு .!
மனமிருந்தால் கொடுக்கலாம்
சிறப்பு பாதுகாப்பு .!!
மணமில்லை என்பது
இவனின் தனிச்சிறப்பு ..!!!
இளமையில் இவன்
நிறமோ கருப்பு .!
நடுதர வயதில் மாற்றங்களால்
வரும் வெளுப்பு ..!!
இவனை வைத்து
கொலையாளியை பிடிக்கலாம் என்பது
அறிவியலின் கண்டுபிடிப்பு ..!!!
மொத்தத்தில் இவனை
பேணிகாப்பது என்பது
நம் பொறுப்பு .!
இருப்பதை விட்டு
இழந்தபின் புலம்புவது என்பது
பொறுப்பற்ற பிழைப்பு ..!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment