-->

Saturday, October 30, 2010

இதோ எனது கிறுக்கல்களில் சில ................

1. கவிதைகள் எழுதிய அனுபவங்கள் இல்லை அனால் இன்று..... நான் எழுதுபவை அனைத்தும் கவிதைகளாகின்றது என்னவளால் !!! 2. நம் வாழ்வில் நம் காதல் வாழ்வதும் என் மரணத்தில் என் காதல் வாழ்வதும் உன் கையில்..... 3. உயிர் அடங்கும் அந்த நாளில் நினைவுகள் அடங்கிவிடும்.... நினைவுகள் அடங்கும் அதே நாளில் உன் நினைவும் அடங்கிவிடுமென்று நினைக்கும் போதுதான் அன்பே......... நீண்ட நாள் உயிர் வாழவேண்டுமென்ற ஆசையே வருகிறது!!!!!!!! 4. இந்த பேனா எழுதிய முதல் வார்த்தை - உன் பெயர் இப்பொழுது நன்றாக பார்... உன் பெயர் எவ்வளவு அழகாக தெரிகிறது! அதைவிட ஒரு ஆச்சர்யம்!! முன்பு இருந்ததை விட அழகாகிவிட்டது உன் பெயர் எழுதிய என் பேனா !!!! 5. அன்பே, எனக்கு மட்டுமல்ல... என் வீட்டு கடிகாரத்திற்கும் என்ன ஆனதென்று தெரியவில்லை நீ இருக்கும் போதுமட்டும் மிக வேகமாய் சுற்றுகிறதே!!! 6. ஆயிரம் இழப்புகள்.... ஆயிரம் தோல்விகள்..... ஆயிரம் ஆயிரம் வலிகள் இருந்தாலும் நான் நானகவே பிறக்க விரும்புகிறேன் என்னவளின் அன்புக்காக !!!!! 7. காதல்.... இந்த வார்த்தையை பலபேர் வெறுக்கிறார்கள்.... என்னவள் என்மீது வைத்திருக்கும் காதலை பாருங்கள்.... அந்த வார்த்தையை மட்டுமல்ல காதலையே உங்களுக்கு பிடிக்கும் !!!! 8. என்னால் ஆண்டவனை புரிந்துகொள்ளவே முடியவில்லை.... வாழ்கையை கற்றுக்கொள்ள கஷ்டங்களை கொடுத்தாலும்....... அந்த வாழ்க்கை என்றும் இனிமையாகவே இருக்க என்னவளையும் கொடுத்திருக்கிறானே!!!!!! 9. அன்பே.. உன் காதோர முடியை என் சுண்டு விரலால் ஒதுக்கிவிட்டு உன் காதில் என் காதலை நான் சொல்ல அந்நேரம்.... உன் உதட்டோரம் நீ தவழவிடும் புன்னகையை ரசிப்பதற்காகவே ஆயிரம் முறைகூட சொல்லலாமடி "நான் உன்னை காதலிக்கிறேன்" என்று !!!!! 10. பத்து நிமிடங்கள் எழுதினால் வலிக்கின்ற எனது கைகள் பல லட்சம் தடவை உனது பெயரை எழுதினாலும் வலிப்பதில்லையே ஏன்???? 11. அன்பே, நெடுநேரம் தூங்க முயன்றும் தோல்வியே முடிவாய் கிடைத்தது... ஏனென்று வெகுநேரம் சிந்தித்துப் பார்த்தேன் பின்பு தான் புரிந்தது உன் பெயரை நான் ஒருமுறைகூட உச்சரிக்கவில்லையென்று உன் பெயரை உச்சரிக்காவிடில் என் மூளை கூட கண்களுக்கு உத்தரவு தர மறுக்குதடி உறங்குவதற்கு என் ஐம்புலன்களையும் அடக்கி ஆண்டுகொண்டிருக்கும் என் மூளையையே உன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாயே இதயத்தை மட்டும் தான் உனக்கு கொடுத்தேன் நீயோ இறைவன் எனக்கென்று கொடுத்த அனைத்திலும் சங்கமித்திருகின்றாய் மன்னித்து கொள்ளடி...... நீ என் இதய தேவதை என்று தவறாய் புரிந்து கொண்டேன் - அனால் நீ என்னை எனக்கு தெரியாமல் ஆண்டுகொண்டிருக்கும் அழகு தேவதை இந்த தேவதைக்கு பரிசாய் தர நீ முழுவதுமாய் ஆக்ரமித்துள்ள என்னை தவிர வேறொன்றுமில்லை என்னிடம்..... என்னை முழுவதுமாய் தந்துவிட்டேன் அல்லிரானியே வந்து என்னை முழுவதுமாய் ஆட்சி செய்யடி !!!!!